<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">தமிழ்நாடு அரசு, ஊனமுற்றவர்களை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.</p> <h3 style="text-align: justify;">கை, கால் ஊனமுற்றவர்</h3> <p style="text-align: justify;">ஒரு கை அல்லது ஒரு கால் இழந்தோரை திருமணம் செய்து கொள்பவருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.</p> <h4 style="text-align: justify;">உதவிக்கான தகுதிகள்</h4> <ul> <li style="text-align: justify;">தம்பதிகளில் ஒருவர் கை, கால் ஊனமுற்றவராக இருத்தல் வேண்டும்.</li> <li style="text-align: justify;">பிறவியிலேயே ஊனமுற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.</li> <li style="text-align: justify;">குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 24000க்குக் குறைவாக இருக்க வேண்டும்.</li> </ul> <h4 style="text-align: justify;">உதவித்தொகை</h4> <p style="text-align: justify;">ரூபாய் 5000 வழங்கப்படும். இதில் ரூபாய் 3000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 2000 காசோலையாகவும் வழங்கப்படும்.</p> <h3 style="text-align: justify;">பார்வையற்றவர்</h3> <p style="text-align: justify;">பார்வையற்றவரைத் திருமணம் செய்து கொள்பவருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.</p> <h4 style="text-align: justify;">உதவிக்கான தகுதிகள்</h4> <ul> <li>தம்பதிகளில் ஒருவர் பார்வையற்றவராக இருத்தல் வேண்டும்.</li> <li>பார்வையற்றவரைத் திருமணம் செய்து கொள்ளும் பார்வையுடையவரின் ஆண்டு வருமானம் 24,000க்குக் குறைவாக இருக்க வேண்டும்.</li> </ul> <h4 style="text-align: justify;">உதவித்தொகை</h4> <ul> <li style="text-align: justify;">ரூபாய் 10000 வழங்கப்படும். இதில் ரூபாய் 7000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 3000 ரொக்கமாகவும் வழங்கப்படும்.</li> </ul> <h3 style="text-align: justify;">பேசும் திறனற்ற காது கேளாதவர்</h3> <p style="text-align: justify;">பேசும்திறனற்ற காது கேளாதவர்களைத் திருமணம் செய்து கொள்பவருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.</p> <h4 style="text-align: justify;">உதவிக்கான தகுதிகள்</h4> <ul> <li style="text-align: justify;">திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் 100 சதவிகிதம் பேசும் திறனற்று காதுகேளாதவராக இருத்தல் வேண்டும்.</li> <li style="text-align: justify;">35 வயதுக்கு மேற்படாதவர்களுக்கு வருமான வரம்பு எதுவுமில்லை.</li> </ul> <h4 style="text-align: justify;">உதவித்தொகை</h4> <ul> <li style="text-align: justify;">ரூபாய் 5000 வழங்கப்படும். இதில் ரூபாய் 3000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 2000 ரொக்கமாகவும் வழங்கப்படும்.</li> </ul> <h3 style="text-align: justify;">விண்ணப்பிக்க</h3> <p style="text-align: justify;">மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மறுவாழ்வு அலுவலர் அலுவலகத்தில் தேவையான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று நிரப்பி, தேவையான இணைப்புகளைச் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் இந்த விண்ணப்பப் படிவங்களை ஆய்வு செய்து குறிப்பிட்ட உதவித்தொகைகளை வழங்குகிறது.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை</p> </div>