<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">தமிழ்நாடு அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் மூலம் கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இருவகையாகப் பிரித்து அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தினைச் செயல்படுத்துகிறது.</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/social-welfare/baeba4bcdba4bbfbaf-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b8ab95bcdb95bc1bb5bbfb95bcdb95bc1baebcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/Tamil_News_large_122204020150403234703.jpg" /></p> <p style="text-align: justify;">இத்திட்டம் முன்பு அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என்கிற பெயரில் செயல்படுத்தப்பட்டது.</p> <h3>கலப்புத் திருமணம் முதல்வகை</h3> <p style="text-align: justify;">தமிழ்நாடு அரசால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.</p> <h4>உதவிக்கான தகுதிகள்</h4> <ul> <li style="text-align: justify;">திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் கட்டாயம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.</li> <li style="text-align: justify;">பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.</li> <li style="text-align: justify;">திருமணம் நடந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.</li> </ul> <h4>உதவித்தொகை</h4> <p style="text-align: justify;">ரூபாய் 20000 வழங்கப்படும். இதில் ரூபாய் 10000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 10000 காசோலையாகவும் வழங்கப்படும்.</p> <h3>கலப்புத் திருமணம் இரண்டாம்வகை</h3> <p style="text-align: justify;">தமிழ்நாடு அரசால் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ளும் முற்பட்ட வகுப்பினர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.</p> <h4>உதவிக்கான தகுதிகள்</h4> <ul> <li style="text-align: justify;">திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் முற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.</li> <li style="text-align: justify;">பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.</li> <li style="text-align: justify;">திருமணம் நடந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.</li> </ul> <h4>உதவித்தொகை</h4> <p style="text-align: justify;">ரூபாய் 10000 வழங்கப்படும். இதில் ரூபாய் 7000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 3000 காசோலையாகவும் வழங்கப்படும்.</p> <h3>விண்ணப்பிக்க</h3> <p style="text-align: justify;">மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தில் தேவையான விண்ணப்பப்படிவங்களைப் பெற்று நிரப்பி தேவையான இணைப்புகளைச் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் : </strong>தமிழ்நாடு அரசு</p> </div>