<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">நோக்கம்</h3> <p style="text-align: justify;">இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும், ‘அனைவருக்கும் ஓய்வூதியம்’ (NPS – National Pension System) எனும் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அனைத்து குடிமக்களுக்கும் ஓய்வு காலத்தில் வருமானம் கிடைக்கச் செய்வது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இது, முதுமையில் பொருளாதார பாதுகாப்பின்றி இருப்பதை தவிர்ப்பதுடன், மக்களுக்கு சேமிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தும் .</p> <h3>பொதுத் துறை வங்கிகள்</h3> <p style="text-align: justify;">அஞ்சல் துறை, பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 58 நிறுவனங்களில், இந்த திட்டத்துக்கான கணக்கு ஆரம்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ‘பிரான் எண்’ (PRAN- Permanent Retirement Account Number) தரப்படும்.</p> <h3>தகுதிகள்</h3> <ul style="text-align: justify;"> <li>இது வாழ்நாளுக்கான எண். 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.</li> <li>மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை எளியோர் என்று அனைவரும் பயன் பெறலாம்.</li> <li>வெளிநாடு வாழ் இந்தியர்கள் (N.R.I.) மற்றும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (P.P.F.) சந்தாதாரர்களும் முதலீடு செய்யலாம். இது அனைத்து வங்கிகளிலும், குறிப்பாக தென் இந்திய வங்கிகள் அனைத்திலும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</li> </ul> <p style="text-align: justify;"><strong>பணம் செலுத்தும் முறை</strong></p> <ul style="text-align: justify;"> <li>இத்திட்டத்தில் சேர முதலில் ரூ. 600 செலுத்த வேண்டும்.</li> <li>பின்னர் மாதாமாதம் குறைந்தபட்சம் ரூ. 100 வீதம் செலுத்த வேண்டும்.</li> <li>நீங்கள் ரூ. 100 செலுத்தினால், உங்கள் கணக்கில் ஆண்டுக்கு ரூ. 100 மத்திய அரசு செலுத்தும் (முதல் 4 வருடங்களுக்கு மட்டும்).</li> <li>அதிகபட்சமாக 12 ஆயிரம் ரூபாய் வரை மாதம் தோறும் செலுத்துபவர்கள் வரை தான் மத்திய அரசின் 1000 ரூபாய் கிடைக்கும். அதற்கு மேல் செலுத்துவோருக்கு இந்தச் சலுகை இல்லை.</li> <li>சந்தாதாரருக்கு 60 வயது ஆகும் போது, அவர் கணக்கில் உள்ள தொகையில் 60% எடுத்துக் கொள்ளலாம்.</li> <li>மீதி தொகையிலிருந்து மாதாமாதம் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும். அதுவும் 8% முதல் 12% கூட்டு வட்டியுடன்.</li> </ul> <p style="text-align: justify;">மகளிர் சுய உதவிக் குழுக்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், பகுதி நேர வேலை தேடுபவர்கள் என அனைவரும் இத்திட்டத்தில் முகவர்களாக சேர்ந்து வருமானமும் ஈட்டலாம்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்:<strong> </strong><a class="external-link ext-link-icon" title="புதிய சாளரத்தில் திறக்கும் ஒரு வெளி இணையதளம்" href="http://pfrda.org.in/index.cshtml" target="_blank" rel="noopener">ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்</a></p> </div>