பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் பங்களிப்பு ஒரு நாட்டின் பொருளாதார வலிமை, அந்த நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் பங்களிப்போடு நெருங்கிய தொடர்புடையது. பெண் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், கல்வி கற்றவர்களாகவும், பாதுகாப்பாகவும் வளரும்போது, அவர்களால் சமூகத்திற்குப் பயனுள்ள பங்களிப்பை வழங்க முடிகிறது. மாறாக, ஊட்டச்சத்து, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளில் ஏற்படும் இடைவெளிகள் தனிநபர்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒருவரது வாழ்நாள் முழுமைக்குமான அதிகாரமளித்தல் அணுகுமுறைக்கு முன்னுரிமை அளித்துள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த அணுகுமுறையின் மையமாகச் செயல்படுகிறது. ஊட்டச்சத்து, பாதுகாப்பு மற்றும் ஆதரவு போன்ற அடிப்படை சேவைகளை வலுப்படுத்தப் பல்வேறு திட்டங்களை இது செயல்படுத்துகிறது. ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பை மேம்படுத்த சக்ஷம் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து 2.0, பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலை அதிகரிக்க மிஷன் சக்தி, குழந்தை பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வாத்சல்யா இயக்கம் ஆகிய முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனுடன் கல்வி அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் திட்டங்களும் இணைந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிவகை செய்கின்றன. நல்ல ஊட்டச்சத்தும் வலுவான சுகாதாரமும் ஒரு வளமான தேசத்தைக் கட்டமைக்க அவசியமானவை. மிஷன் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து 2.0 என்பது குழந்தைகள் (0-6 வயது), வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க உருவாக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த திட்டமாகும். அங்கன்வாடி மையங்கள் இவை அத்தியாவசிய ஊட்டச்சத்தை வழங்குவதோடு, மகிழ்ச்சியான ஆரம்பகால கற்றல் இடங்களாகவும் செயல்படுகின்றன. 3-6 வயதுக் குழந்தைகளுக்கு விளையாட்டு வழிக் கல்வியை வழங்கி, அவர்களைப் பள்ளிக்குத் தயார்படுத்துகின்றன. ஊட்டச்சத்து இயக்கம் மார்ச் 8, 2018 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிக்கப் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்படும் மத்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். அங்கன்வாடி மையங்கள் அங்கன்வாடி மையங்களை ஆரம்பகால கற்றல் மையங்களாக மாற்றுவதே ஊட்டச்சத்து மற்றும் கல்வி திட்டத்தின் நோக்கமாகும். டிசம்பர் 2025-க்குள், 8.55 லட்சத்திற்கும் அதிகமான அங்கன்வாடி பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆதார்ஷிலா (0-3 வயது), நவ்சேதனா (3-6 வயது) ஆகிய பாடத்திட்டங்கள் 12 மொழிகளில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம் பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம், மிஷன் சக்தியின் கீழ் செயல்படுகிறது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்குகிறது: முதல் குழந்தைக்கு: தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ 5,000 இரண்டு தவணைகளாக வழங்கப்படுகிறது. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): பெண் குழந்தைகளின் பிறப்பை ஊக்குவிக்கவும், பாலின விகிதத்தை மேம்படுத்தவும், இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாகப் பிறக்கும்போது ரூ 6,000 ஒரே தவணையாக வழங்கப்படுகிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த இந்தியா ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. போஷன் ட்ராக்கர் போன்ற டிஜிட்டல் தளங்கள் இச்சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் உறுதி செய்கின்றன. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235796®=3&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்